Wednesday 27 November 2013

கலைந்த கோலம்


ஆழ்ந்த நித்திரையில்
ஒரு கனவு
அக்கனவுக்குள்
ஒரு தூக்கம்

வேடனின் அம்பொன்று
மரக் கிளையில் அமர்ந்திருந்த
கிளியின் கழுத்தை குறி பார்க்க
வீழ்ந்து மடிந்ததந்தக் கிளி

பதறி துள்ள
கலைந்தது

கனவில் வந்த தூக்கமா?
தூக்கத்தில் வந்த கனவா?

இன்னும் எழும்பவில்லை நான் ...



5 comments:

  1. அம்மா, சூப்பர்

    ReplyDelete
  2. ஆழ்ந்த நித்திரையில் ஓர் கனவு ,அக்கனவுக்குள் ஒரு தூக்கம்
    -கனவில் வந்த தூக்கமா ?தூக்கத்தில் வந்த கனவா ?
    வீழ்ந்து மடிந்த கிளி....... கனவுக்குள் கடினமான கவிதை
    ஆனாலும் அருமை !!

    ReplyDelete