Tuesday 1 April 2014

வார்த்தைப் பூக்கள்


கவிதைகளுக்கென
வார்த்தைகள் தேடும் போது
வசப்படுவதில்லை

தனிமையிலும்
கவிதைத் தாக்கங்களும்
இல்லா பொழுதுகளில்
சுற்றி சுற்றி வருகின்றன
மனதில் பதியா வேகத்துடன்

சுற்றும் வார்த்தைகளை
மனதில் விதைத்து சேமிக்க

அவை விருட்சங்களாய்
தழைத்து
கிளைகளெங்கும்
வார்த்தைப் பூக்கள்
கொய்து கோர்த்து மாலைகளாய்

மீண்டும் விதைகளாய்
விருட்சங்களாய்
எங்கும் கவி மாலைகள் !!!


No comments:

Post a Comment