Friday 12 September 2014

முடிந்திடா உரையாடல்


இன்னும் முடிந்திடா உரையாடலின் முடிவில்
சூழ்ந்திடும் மௌனம் போர்த்தி
உறங்கச்செல்கிறேன்

தலையணையாக மாறிய கைகளில்
உறுத்தும் காதணியாக
என்னை அசைந்து புரள வைக்கிறது
என்னோடு சேர்ந்து உறங்க வந்த உரையாடலின்
நெருடிய சொற்கள்

வரவேற்பறையில் விட்டுவிட்டு வந்த வார்த்தைகளும்
இங்குமங்கும் உலாவிகொண்டிருகின்றன உறங்க மறுத்து
மனதின் சுவர்களில் எதிரொலித்துக்கொண்டே!!!


No comments:

Post a Comment