வரம் தருவாயா ?
என் வார்த்தைக்குள்
சிக்காத கவியொன்றை
வரமாய் கேட்கிறேன்
உனக்காக நான் எழுத
பெருமழையின்
சிறு தூறலாய் மாற
வரமாய் கேட்கிறேன்
உன் மெய் தீண்டி கொள்ள
வெண்பனியின்
ஒரு துளியாய் மாற
வரமாய் கேட்கிறேன்
உன்னில் உறைந்து கொள்ள
என் உயிருக்குள்
நீ உறைந்திட
வரமொன்று
கேட்கிறேன்
தவங்கள் ஏதுமின்றி!!!
பெருமழையின்
ReplyDeleteசிறு தூறலாய் மாற
வரமாய் கேட்கிறேன்
உன் மெய் தீண்டி கொள்ள // இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா
என் எழுத்துக்கு காரனமானவளே நீ தானே டா...
DeleteYes very nyc
ReplyDeleteநன்றி வெங்கடேசன் ...
Deleteவரம் மட்டும் கிடைச்சுதுன்னா அப்புறம் வேறென்ன வேணும்மா
ReplyDeleteவேறுதுவும் தேவையில்லையே டா ...:)
ReplyDelete