Monday 17 February 2014

நிஜம் தேடி ...


நிஜம் தேடி அலைந்து
தோற்கும் நேரங்களில்
தளர்ந்து போகின்றது அகம் ...

முட்களின் கூர்மையாய்
வார்த்தைகளின் வலி
மனதில் தைக்க,
மடை தடுக்கும் வெள்ளமாய்
இமை தட்டி வழியும் கண்ணீர்
கன்னக்குழி நிறைக்க...

உள்ளம் மூடி
தோளோடு சாய்கிறேன்
கண்ணீரின் பிம்பத்தில் ஒரு முகம்
நெஞ்சோடு அணைக்கையில் ...

வார்த்தை தொலைத்து
மௌனப் பாலத்தில்
கடந்துகொண்டிருக்கிறேன்
வாழ்வோடு சேர்ந்த அன்பை தேடி நிரப்ப...

இன்றோ பொறுமை காத்து நிற்கிறேன்
விடியலின் உண்மைகளுக்காக ....

2 comments: