Tuesday 29 October 2013

உன்னுள் உறைகிறேன் .



நினைவெனும்
சிறகு விரித்து 
நீ இருக்கும் இடம் தேடி
எனை பறக்கச் செய்கிறாய்

நிஜங்களில்
நெடுந்தொலைவில் இருக்கும் நீ
கனவுகளில் என்னுடன்
கை கோர்த்து வலம் வருகிறாய்

தென்றலாய் தவழ்ந்த என்னை
நேசித்துப் பின் சுவாசித்து
உன் இதயத்துள்
சிறை வைத்துக் கொண்டாய்

என் மூச்சு
திணற திணற
கவிதையாய் வந்து
எனைக் கட்டிக் கொள்கிறாய்

என் மனதில்
காதல் தீ மூட்டி
நீ குளிர் காய்கிறாய்
உன் கதகதப்பில்
நானும் குளிர் காய்ந்துக்
கொள்கிறேன் நிரந்தரமாய்

சிறை வைத்த
உனக்கே உயிருமாய்
நான் உறைந்தே போகிறேன் .!!!


10 comments:

  1. அருமை... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன் சார்... உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் ஊக்க படுத்துகிறது ...

    ReplyDelete
  3. மூச்சுத் திணற திணற கவிதையாய் ,காதல் தீமூட்டி இருவரும் குளிர் காயும்
    சிறை வைத்த உனக்கே உயிருமாய் நான் உறைந்து போகிறேன் ........
    நல்ல நல்ல வரிகள் !! அருமை .தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி பதி ஐயப்பன் ... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  5. //நிஜங்களில்
    நெடுந்தொலைவில் இருக்கும் நீ
    கனவுகளில் என்னுடன்
    கை கோர்த்து வலம் வருகிறாய்//
    ரசித்த வரிகள்!

    ReplyDelete
  6. ஹஹா இது தான் பலமும், பலவீனமும்

    ReplyDelete
  7. அருமை! சிறப்பான வரிகள்! நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி... தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...

      Delete