Monday 28 October 2013

வடதிசையில் தலை வைத்து படுக்கவேண்டாமே .




வடக்கு பக்கம் தலை வைத்து படுக்காதே என்று அடிக்கடி எச்சரிப்பாள் பாட்டி.
ஏன் பாட்டி இப்படி சொல்கிறாள் என்றெல்லாம் அப்போது யோசிப்பது இல்லை.
அவள் சொல்வதை வகை வைப்பதும் இல்லை. ஆனாலும் பின் நாளில் இது பற்றி தெரிய வந்த போது பாட்டி எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமாக சொல்லியிருக்கிறாள் என்று நினைக்கையில் கொஞ்சம் வியந்து தான் போனேன்.


காந்தம், உலோகப் (இரும்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் சக்தி கொண்டது என்பது நாம் சிறு வயதில் பள்ளிகூடத்தில் செய்த ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொண்ட ஒன்று தானே.

வட துருவம் மற்றும் தென் துருவம் காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மைகளைக் கொண்டதாகும். இதுவும் பள்ளிகூடத்தில் படித்ததே.

சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது.

எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது.

அத்துடன் பூமி தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது. பூமியின் இரண்டு துருவங்களில் வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.

இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.

அதைப் போலவே நமது தலை  பகுதி நேர் மின்னோட்டம் கொண்டது. கால் பகுதி எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் நமது எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.

காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம். இந்த உண்மை தெரிந்து சொன்னாளோ இல்லையோ தெரியாது. ஆனால் அவள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்பது என்னவோ உண்மை.


6 comments:

  1. அறிந்தேன்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இத பத்தி ஒரு நாள் அம்மா எனக்கு சொல்லிக் குடுத்தாங்க அம்மா, அம்மாவுக்கு எல்லாம் தெரியும்னு நான் பெருமையா என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன். கேள்வி கேளு, அப்புறம் அதுக்கான விடைய தேடுன்னு சொல்லுவாங்க :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை டா நாமே கேள்வி கேட்டு விடை கண்டுபிடிக்கும் போது நான் எதில் கேள்வி கேட்கிறோமோ அந்த பகுதி நமக்கு மிக பரிட்ச்சயமாகி விடுகிறது ...

      Delete
  3. idhukuthan..periyavangha..naasuka..vadake..thala..vachi..padutha..keta..kanvellam..varum..nu..solli..vachirukangha..ena..namdan..neradiya..sonna..edyum..ketuka..maatome..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரசன்னா ...

      Delete