Monday 18 November 2013

தென்றலென பிறந்தவளே



தென்றலென பிறந்து
முகிலோடு கலந்து
கார்மேகமாய் உருவெடுத்து

பூஞ்சாரலாய்
எம் சுவாசம் வருடி
வானவில்லின் ஜாலத்தோடு

பெருமழையாய்
பூமியை முத்தமிட்டு

மலைகளில் அருவியாய்
ஆர்ப்பரித்து
காடுகளில் நதியாய்
நடனமாடி

கடல் அன்னையில்
சங்கமித்து
சூரியக் காதலனின்
அன்பு தீண்டலில்

மீண்டும் மீண்டும்
குளிர் வாடலாய் பிறக்கிறாய்!!!


6 comments:

  1. ரசித்தேன்... படமும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ...

      Delete
  2. அம்மா, சூப்பர்...

    ReplyDelete
  3. தென்றலனப் பிறந்து ,முகிலொடு கலந்து ,கார்மேகமாய் மாறி ( மாரி )
    பூஞ்சாரல் ,பெருமழை ,மலை அருவி .,காட்டு நதி ,கடல் அன்னை -
    மீண்டும் வானமேறி ...மழையாய் அருமை !!!! மீரா மேடம் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி சார்...:)

      Delete