Wednesday 4 December 2013

காதல் விருட்சமாய் நீ




இல்லையென நான் மறுக்க
என்னில் நினைவுகளாய்
நிரம்புகிறாய்

கல்லெறிந்த நீர் திவலைகளாய்
அலையுதென் மனம்

நீ விதைத்துச் சென்ற
காதல் விதையொன்று
கிளைபரப்பி
அகண்ட விருட்சமாய்
வேரூன்றி நிற்கிறதெனக்குள்

அம்மரக் கிளை அமர்ந்த
மனப் பறவையை தூதாய்
அனுப்பிவைத்தேன் உன்னிடம்

அண்ட பெருவெளி சுற்றி
உன்னிடம்
அடைக்கலமானது அப் பறவை

தஞ்சம் வந்த பறவையை
நெஞ்சஅணைத்துக்கொள்ளடா ...



6 comments:

  1. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இல்லை என மறுத்த காதல் ,நீர்த் திவலையாய் சின்னச் சலனம் ,
    காதல் விதை மரமாகி ,மரக் கிளைக்கு மனப் பறவையை தூதாய்
    அனுப்பும் அளவுக்கு வளர்ந்து விட்டது -இல்லை என மறுத்த காதல்
    ---கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் ...அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்....:)

      Delete
  3. ஹஹஹா அந்த பக்கம் நின்னு கை விரிச்சுட்டு இருக்குறது தெரியுதா

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.... தெரியுது டா...

      Delete