Thursday 26 December 2013

சுமுகமான உறவுகள் நிலைத்திட ...





குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க......

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.

2.அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.(Loose Talks)

3.எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise)

4.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance)

5.நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.(Adamant Argument)

6.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)

7.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales)

8.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.(Superiority Complex)

9.அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

11.உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.(Flexibility)

12.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)

13.மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)

14.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

15.பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்



4 comments:

  1. இதனை ஏற்கெனவே ஏதோ ஒரு துணிக்கடை விளம்பர அட்டையில் படித்ததாய் ஞாபகம்... இருந்தாலும் படிக்காதவங்க தெரிஞ்சுக்கட்டுமே...

    ReplyDelete
  2. இதே கருத்துக்கள் தானே உறவுகளை சுமூகமாக நிலைத்திட எல்லோரும் பயன் படுத்த வேண்டும் .... அதனால் இந்த பதிவை பார்த்தவுடன் எதனுடைய பிரதிபலிப்பாய் உங்களுக்கு தெரிகிறது... அதுவும் தவறில்லை... ஏன் என்றால் இதே கருத்துக்களைத்தான் எழுத்து மற்றும் சொல்லும் விதத்திலும் மாறுபாடுகள் இருக்குமே தவிர கருத்துக்கள் ஒன்றாகவே இருக்கும்... நன்றிகள் கருத்திட்டமைக்கு....

    ReplyDelete
  3. எல்லாமே வைர வரிகள் -வாழ்வின் நெறிகள் !

    மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும் ,
    இனிய , இதமான சொற்களைப் பயன் படுத்த
    தவறாதீர்

    புன்முறுவல் காட்டவும் ,சின்ன அன்பு சொற்களை
    சொல்ல நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்
    பேச்சிலும் , நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளை
    தவிர்க்கவும் ...அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து
    பேசுங்கள் ,....

    அருமையான பதிவு
    தொடர்ந்து பதியுங்கள் ..நன்று ,நன்றி !!










    ReplyDelete