Tuesday 7 January 2014

தவிப்பின் விடையா நீ?




ஏன் , எப்படி
என்று தொக்கி நிற்கும்
குழப்பமான கேள்விகள்
பல என்னை சுற்றி .

விடையேதும் தெரியாத
புதிர்க் குன்றாய்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்

எங்கிருந்து தொடங்குவது
என் விசாரிப்புகளை
என்று எனக்கே தெரியவில்லை

உனக்கும் எனக்கும்
இடையே திரை போல
ஏதோ ஒன்று
கிழித்தெறிய
வழி தெரியாமல்
தவிக்கிறேனடா !!!

தடை களைந்து
மீன்டும் உனை சேர
வழி சொல்லடாயென
தாங்கி நிற்கிறேன் உன்னிடம்.!!!

தடை என்று
மனம் நினைத்தால்
தடையாகும் நம் உறவு
விடை தெரியா
கேள்விகளில் இதுவும்
ஒன்றென விட்டு விடு
என் கண்ணே என்கிறாய்

என்னடா என்ற
ஒரு வார்த்தையில்
என் குழப்பங்கள் அனைத்தையும்
தீர்த்தாயடா

இதழாலே எனை தாங்கி
இறைஞ்ச துவங்குகிறாய் நீயும்.!!!




1 comment: