பெண்ணின் பருவங்கள்
பேதை- 1 முதல் 8 வயதுவரையுள்ள பெண்.
பெதும்பை- 9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.
மங்கை- 11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.
மடந்தை- 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.
அரிவை-19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.
தெரிவை-25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.
பேரிளம்பெண்- 30 வயதுக்கு மேல்உள்ள பெண்.
ஆணின் பருவங்கள் .
பாலன்-1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண்
மீளி-8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்
மறவோன்-11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்
திறவோன்- 15 வயது ஆண்
விடலை-16 வயது ஆண்
காளை-17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்
முதுமகன்- 30 வயதுக்கு மேல் உள்ள ஆண் .
சங்க காலத்திலேயே பெண்கள் தங்களுக்கு வாயதாகிவிட்டது என சொல்லவிரும்பாததால் "பேரிளம்பெண் " என்று சொல்லிகொண்டார்கள் . ஆண்கள் வயதை ஒரு பொருட்டாக கருதாததால் "முதுமகன் " என்று தங்களை அடையாளப் படுத்திகொண்டார்கள் .
ஆனால் இப்பொழுது ஆண்களும் தங்களுக்கு வயதாகி விட்டது என்பதை ஒப்புகொள்ளவதில்லை.
என் மூத்த மகனுக்கு இப்போது விடலைப் பருவம் !!
ReplyDeleteஅவன் பிறந்த போது நான் முதுமகன் நிலைக்குப்
புதுமகன் இப்போதும் நான் முதுமகனே
இனி என் நிலை ஒரே நிலையே காரணம்
இதற்கு அடுத்த நிலை .......!! !!
நன்றி சார்...:)
Deleteபதி
ReplyDelete