Saturday 1 February 2014

ஊடலாய் சில நொடிகள்


உன் அன்பின் பரப்பிற்குள்
அடியெடுத்து வைக்கும் போதே
ஆழிப் பேரலையாய்
இழுத்துக் கொள்கிறாய் என்னை

விக்கித்து நிற்றலும்,
செயலற்று அமர்தலும்,
கைகால் முடக்கி படுத்தலும்
இப்போதென் வாடிக்கையாகிவிட்டது...

நினைக்கும்நொடிகளில்
நிறைத்துவிட்டு போகிறாய் காதலை...

இப்போதேனும் விட்டுசெல்
உன்னிடம் சண்டையிட காரணமாய்
ஒன்றிரண்டு தவறுகளை !!!


4 comments:

  1. // உன்னிடம் சண்டையிட காரணமாய்
    ஒன்றிரண்டு தவறுகளை... //

    ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்... என்னை போல புதிதாக எழுதுபவர்களுக்கு தவறமல் வந்து பின்னூட்டம் அளிக்கும் போது இன்னும் எழுத தூண்டுகிறது ... நன்றி ...

      Delete
  2. நச்சென்று மிக அழகிய ஓர் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜனா சார்...:)

      Delete