Thursday 13 February 2014

தெய்வீக காதலிது



காதலிப்பதாய் கூறி
என் சுட்டுவிரல் கூட தீண்டியதில்லை
ஆசை மொழி பேசி
எனை வெட்க படவைத்ததில்லை
பரிசுகளால் எனை
திக்குமுக்காட செய்ததில்லை

கண்களுக்கு புலப்படா
நம் மன பரிமாற்றங்களிலேயே
என்னுள் வெட்கம் பூக்க செய்கிறாய்
உன்னோருவனின் கரம் பற்ற
வாழ்நாள் முழுதும் காக்க செய்கிறாய்

உன்னை காணாத போதும்
கலையாத கனவிது
நீ அணைக்காத போதும்
அணையாத நெருப்பிது

மனதினில் உறைந்த நீ
மைல்கள் தாண்டி இருக்கிறாய்

மனதில் இணைந்து
உணர்வுகளில் ஒன்றி
என்னில் நீயும்
உன்னில் நானும்
வாழும் நம் தெய்வீக காதலிது.!!


4 comments:

  1. ஆகா...! தெய்வீக வரிகள்...!

    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்... :)

      Delete
  2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete