Sunday 16 February 2014

கற்பனையாய் ஒரு சுமை


சில்லென தென்றல் முகம் வருட
தோளோடு தோள் உரசி
கைகோர்த்து நடந்த
ஒரு மாலைவேளையின் நினைவுகள்...

பக்கமாய் அமர்ந்திருக்கையில்
சுவாசத்தின் வெப்பம் என் மேல் மோத
உன் வசமிழந்த நிமிடங்கள் ...

வியர்வையின் கசங்கலாய் சட்டை பிடித்திழுத்து
மார்பில் முகம் புதைத்து
ஈரத்தோடு காதலையும் உள்வாங்கிய
ஈரமான மணித்துளிகள் ...

நீ விரட்ட
நான் விலக
என்னை இழுத்தணைத்த
கற்பனை பொழுதுகள் ...

இப்படி பல்லாயிரம் கற்பனைகளோடு
உன்னையும் சேர்த்து சுமக்கிறேன்
என் நினைவில் நீ தடம் பதித்த நாள் முதலாய்...


4 comments:

  1. கற்பனை (+) நினைவுகள் என்றும் சுகம் தான்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...:)

      Delete
  2. வியர்வையின் கசங்கலாய்
    சட்டை பிடித்திழுத்து
    மார்பில் முகம் புதைத்து ..
    ஈரத்தோடு காதலையும்
    உள் வாங்கிய ....

    நீ விரட்ட , நான் விலக
    என்னை இழுத்தணைத்த
    கற்பனைப் பொழுதுகள் ..!!!

    இப்படிப் பல்லாயிரம் கற்பனைகள் ....

    அன்பு மிகுதியான
    காதல் கவிதை பதிவு
    அருமை ,அருமை !
    ..........................பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி சார்...:)

      Delete