Tuesday 15 April 2014

இயல்பின் மாற்றங்கள்


அந்திசாயும் பொழுதொன்றில்
அருகிலுள்ள பூங்காவில்
ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தேன்

நிஜங்களின் நிதர்சனங்களும்-மனதில்
நிழலாடும் எண்ணங்களும்-அலைகளாய்
கரை மோதிச் சென்றன.


வார்த்தைப் பரிமாற்றங்களோடு
வசந்தத்தின் கற்பனைகள் சுமந்து
ஆங்காங்கே ஓரிருவர் இருக்க ...

எறும்புகளின் தேடல்களும்
மனதின் அலைவரிசையாய் ஒலிக்கும்
பறவைகளின் கீதங்களும்
எல்லையில்லா ஆனந்தமாய் !!

பின்னிய வலையறுந்து
கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவற்று கையேந்திய
பிஞ்சின் வலியும்
கனக்கத்தான் செய்கிறது

வாயிலுக்கருகில் உள்ள மரத்தடியில்
அயர்ச்சியாய் உறங்கும் முதியவரை காணவில்லை
என்ன ஆயிற்றோ ...
நாளை எவரோ ...

நாளையும் செல்வேன்
தன்னியல்பில் இருந்து மாறியவை
எவையென்றறிய ...


No comments:

Post a Comment