Sunday 20 April 2014

தவிர்த்த ப்ரியங்கள்


தவிர்த்தோ தவிர்க்கபட்டோ
பல நேரங்களில் நம் ப்ரியங்கள்...

ஏற்றுக்கொள்ளாத ப்ரியங்களும்-உடைந்து
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
என்னவாகுமென தோன்றுகிறது

தினங்கள் தோறும் தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக்கொள்ளும்
மரங்களைப் பார்க்கும் போதும்
மனதை ஈர்க்கும் கவிதைகள் வாசிக்கும் போதும்

உடைந்த நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகவும்

தவிர்த்த ப்ரியங்கள்
ஈர்க்கும் கவிதைகளாகவும்
உருமாறி உள்ளதென்று!!!



2 comments: