Friday 15 August 2014

இளஞ்சிங்கங்களின் விடியல்???


இருள் சூழ் கருவறை தொடங்கி
இருளில் முடங்கி முடிகிறது
இளம்பிஞ்சுகளின் விடியல்கள்

சுழலும் வாழ்வில்
சுகங்களையும் சோகங்களையும்
கற்பித்த வாழ்வின் பக்கங்கள்
பாடசாலைகள் அறியா...

இளங்குருதி சுண்டி
வியர்வையாய் பூக்கிறது
இம் மழலைச் செடிகளில்

எதிர்கால கனாக்களின்
வெளிச்சப் பக்கங்களை
திரையிட்டு மறைகிறது
விழி நீர்த் துளிகள்..

விதியா மதியா... யாரின் தவறு ?

பாலை மணலில்
நீந்திப் பழகும் மீன் குஞ்சுகள் இவர்கள்

விடிந்திட மறுக்கும் வாழ்வை வரவேற்க
விடியலில் விழிக்கும் இளஞ்சிங்கங்கள் இவர்கள்!!!


No comments:

Post a Comment