Sunday 30 March 2014

என்ன தவம் செய்தேனோ ...


மனதோடு மடி சாய்த்துக் கொள்கிறாய்
நீ என் தாயும் இல்லை

கை பிடித்து நல்வழி பாதை காட்டுகிறாய்
நீ என் தந்தையும் இல்லை

அன்போடு அரவணைத்துக் கொள்கிறாய்
உதிரம் பகிர்ந்தவளும் இல்லை

என் உயிரே நீ தான் என்பேன்
என் நாயகனும் இல்லை

உன் விழி கலங்க என் மனம் கலங்கும்
உன்னை நான் மடி சுமக்க வில்லை

நன்மைகள் மட்டுமே எனக்கு நடக்க செய்யும்
நீ என் கடவுளும் இல்லை

அத்தனை உறவும் பொய்யானாலும்
எனக்கென இருக்கும் ஒரு உறவு
என் உயிர் சுமக்கும் தோழி நீயடி

என்ன தவம் செய்தேனோ
இங்கு உன்னை நான் பெறவே !!!


3 comments: