Sunday 30 March 2014

நினைவோடு ...


கனவில் விதி எழுதி ,
நினைவில் உணர்வெழுதி,
நீ எங்கோ நான் எங்கோவென
இருந்த போதும் ,

காற்றினிலே அன்பெழுதி
தூதாய் அனுப்புகிறேன்
அதைநீ முத்தமிட்டு நேசிக்கிறாய் !!

தோள் இல்லை - ஆனாலும் நான்
சாய்ந்துகொள்கிறேன் -உன்
மடியில்லை - இருந்தும் நான்
துயில் கொள்கிறேன்!!

விண்ணை எட்டிய
நம் நட்பின் உணர்வுகள் இன்று
நட்சத்திரங்களோடு நடுவினில்
உலவிக் கொண்டிருக்க

நானும் உன் நினைவுகளின் தனிமையில்
உலாவிக் கொண்டிருக்கிறேன்...

6 comments:

  1. // காற்றினிலே அன்பெழுதி
    தூதாய் அனுப்புகிறேன்
    அதைநீ முத்தமிட்டு நேசிக்கிறாய் !! //

    ஆகா...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...

      Delete
  2. சிறப்பான கற்பனை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கனவில் விதி எழுதி , நினைவில் உயிர் எழுதி

    நீ எங்கோவென , நான் எங்கோவென இருந்த போதும்

    நட்பின் நினைவுகள் ...இனிமையான ..!

    தோள் இல்லை - ஆனாலும் நான் சாய்ந்துகொள்கிறேன் -உன்

    மடியில்லை - இருந்தும் நான் துயில் கொள்கிறேன் !

    நட்சத்திரங்களின் நடுவினில் -தனிமையில் உலாவும் !!

    கவிதையும் , அதற்க்கான படமும் பொருத்தாமான அழகு !!

    அருமை மேம் .............! பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி சார்...

      Delete