Thursday 10 April 2014

சிறகில் ஒரு பயணம்


பெருமழை நின்ற வானத்தின்
சிறு தூறல் ஒன்றினைக்
கயிறாக பற்றி
பால் வீதியில் உலாவ முயற்சிக்கையில்

எதிர் வந்த தூறலின் நூலிழைநுனி பட்டு
தவறி கீழ் நோக்கி விழ ...

விழுந்த இடம்
பறத்தலுக்கு ஆயத்தமான
பறவையின் சிறகெனபதால்

அச்சிறகையே பற்றி
மீண்டும் ஒரு பயணம் தொடங்குகிறேன்!!

4 comments: