Friday 25 April 2014

யாதுமான என்னவள்



என் விடியல்களின் போது
மலரும் புன்னகை பூவாய்

கலங்கி தவிக்கும் போது
மடி சாய்த்து தலை கோதும் விரல்களாய்

தடுமாறும் போது
தாங்கி நிறுத்தும் தோள்களாய்

முகம் புதைத்து அழும் போது
தாங்கி அணைக்கும் தலையணையாய்

மனம் நோகும் போது
அணைத்துக்கொள்ளும் வெப்பமாய்

உறங்க கெஞ்சும் போது
இமை வருடும் தென்றலாய்

ஆற்றவியலா நேரங்களில்
ஆறுதல் கொடுக்கும் முத்தங்களாய்

எட்டி விலகி போகும் போது
கட்டி கொள்ளும் மழலையாய்

மிரண்டிடும் போது
ஒளிகொடுக்கும் கதிரலைகளாய்

தனிமை படுத்தும் போது
கால் தழுவும் கடலலையாய்

ஏதோ ஒரு பொழுதில் இல்லை
முப்பொழுதும் , எப்பொழுதும்
வேண்டுமடி என் செல்லமே...
நீ என்னவளாய்
என் சுந்தரக் கண்ணழகி !!!






3 comments: