Tuesday 15 April 2014

ஒற்றை விரல் தீண்டலில்....


கடல் தப்பி கரை ஒதுங்கிய
மீன்கள் இரண்டு
மணல் வெளியில்
சந்தித்துக் கொண்டன

கடல் பற்றிய கதைகள் பல
இருந்தன அவைகளிடம்
ஆனால் கடல் இல்லை

வாழ்வின் முடிவை நோக்கி
பயணிக்கின்றன
அதனதன் வழியில்

ஒரு வேளை ,
ஒரு தலை கோதலோ
ஒரு மென் முத்தமோ- இல்லை
ஒரு ஒற்றை விரல் தீண்டலோ
நிகழ்ந்திருந்தால்
கடலற்றும்
வாழ்ந்திருக்கக் கூடும்.


2 comments:

  1. Replies
    1. நன்றி சார்.. தொடர் வருகைக்கும் வாசித்தலுக்கும் ...

      Delete