Sunday 20 April 2014

அடைபடா ஒற்றை புள்ளி


எண்ணும் போது
தவறியிருக்கலாம்

கோடிழுத்து இணைக்கும் போது
விடுபட்டிருக்கலாம்

அதிகப்படியென
தவிர்த்திருக்கலாம்

இதுபோல இன்ன பல
காரணங்கள் இருப்பினும்

இயல்பை மீறி
உறுத்திக் கொண்டிருக்கிறது
கோலத்தில் அடைபடா
ஒற்றைபுள்ளி ..


2 comments:

  1. அடடா! புள்ளிக்கும் ஒரு கவிதை! அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete