Monday 6 October 2014

துளித்துளியாய் வார்த்தைகள்



சில வேளைகளில் நீ விட்டுச் சென்ற வார்த்தைகள்
என் மனக் கோப்பையை நிரப்பி
குழம்பி புலம்பி வழிகிறது

தித்திப்பாய், கசப்பாய், லயிப்பாய், வியப்பாய்...
கோப்பையை நிரப்பும் தருணங்களில்
என்னில் இருந்து கொஞ்சம் தூரமாய் நிற்கிறேன்


கோப்பையை நிறைத்துகிடக்கும் வார்த்தைகள்
சிந்துகின்றன மழை சிதறல்களாய்
சிரித்தப் படி நனையும் சிறு பிள்ளையென
வந்துவிழும் வார்த்தை துளிகளை
கையில் ஏந்தியபடி நான்

வார்த்தைகள் வற்ற காலியாகி கொண்டிருக்கிறது கோப்பை
சிதறிய வார்த்தைகளும் காலிக் கோப்பையுமாக நான் பெருவெளியை நோக்கியபடி
கையில் மீந்த வார்த்தைகளும் சிதறிக்கொண்டிருக்கிறது இப்போது...!


No comments:

Post a Comment