Monday 6 October 2014

மன சாம்ராஜ்யம்



மகிழ்ச்சிப் பூக்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையும் இதுவே
மௌனக்கேவல் வெடித்துச் சிதறும் வெற்றிடமும் இதுவே

நான் மட்டுமே இங்கே ..
மன ஆட்சி நடக்கும் சாம்ராஜ்யத்தின் இளவரசியும் நானே
கடைநிலை பிரஜையும் நானே
எழுதியவையும் எழுதப்படாத வரைமுறைகளும் என் எல்லைக்கு உட்பட்டவையே


சில கனவுச்செடிகளுக்கு கண்ணீர்துளிகளே உரமானது இவ்விடமே
துளிர்விட்ட ஆசைகளின் இளந்தளிர்களை எவரும் அறிந்திடா அழிக்கவியலா ரகசியப் பெட்டகம் இதுவே

பொய்மை மரித்து நிஜம் உயிர்பெறும் நினைவறை
என்னில் நான் புதிதாய் பிறப்பதும் புதுப்பித்துக் கொள்வதும் இவ்விடம் மட்டுமே!!!


1 comment:

  1. http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete