Monday 10 March 2014

மனமெனும் மந்திரப் பறவை



பறத்தலுக்காக
தயாராகிகொண்டிருக்கின்றது
என் மனப் பறவை !

விரித்த சிறகுகளுக்குள்
அடங்குகிறது
பெருவெளியும் பேரண்டங்களும்!!!

எதிர் வரும் தடை உடைத்து
காற்றைக் கிழித்து
பருவம் கீழிறங்கி
சட்டென மேலெழும்புகிறேன்
ஒரு மழலை தேவதையாய்...

சிறு புள்ளியாகி மறைகிறது
பூகோளம் ....

பால்வெளியின் நட்சத்திரங்களை
பூக்களாய் சூடி கொள்கிறேன்
நிலவில் முகம் பார்த்து ரசித்துகொள்கிறேன்
வானம் அதை உடையாய் உடுத்தி ரசிக்கின்றேன்

அத்தனையும் முடித்து
தரையிறங்கி
கடல் பருகி தாகம் தனிகிறேன் !!!

மீண்டும் ஒரு பறத்தலுகாய்
ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது
இம் மனப் பறவை ....


2 comments: