Monday 17 March 2014

"தீ"ரா தாகம்


உழைப்பின் களைப்பை மறந்து நீ
பகலின் புழுக்கம் தொலைத்து நான்
இரவின் கைகளில்

அசைகளை மட்டுமே ஆடையாய் அணிந்து நீ
வண்ணம் தீட்டா ஓவியமாய் நான்

சந்தோஷ மழை சாரலாய் நீ
வெட்கத்தின் விளைநிலமாய் நான்

அணைய மறுக்கும் தீயின் தாகம்
காதலில் கலந்து , கரைந்த பின்பும்

தூரத்தில் கூவிற்று அதிகாலை சேவலொன்று

விடியலோடு விழித்துக் கொண்டது
இரவு சண்டையின் எச்சம்.





2 comments: