Friday 7 March 2014

பெண்ணெனும் சக்தி


பெண்ணெனும் சக்தி
புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று
சரித்திரம் எதுவுமில்லை

கல்வி, அலுவல், குடும்பம்
என சகலமும் உன் கையில் அடங்க,
நீயோ பிறரின் சுயநலத்தீயில் அடங்கிப்போகிறாய்!

மகளாய், சகோதரியாய், மனைவியாய், தாயாய்,
நீ கொண்டிருந்த உருவங்கள் களைந்து
மனித வேட்டையாடும் மிருங்களிடம் மானாய்
அமில மழையில் எரியும் சருகாய்
கள்ளித் தாயின் தவப் புதல்வியாய் ஆனாய்!!

துணிவோடு துயரகற்றி
எழுச்சியுற்றால் மீண்டெழலாம்
துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.

பெண்ணால் முடியாதாது - இதுவரை
உலகில் உருவாகவே இல்லை... !
உங்களால் முடியும் - ஏனெனில்
கருவறை தங்கும் கடவுளை விட
கருப்பை சுமக்கும் பெண்களே மகா சக்தி !!!


4 comments:

  1. /// பெண்ணால் முடியாதாது - இதுவரை
    உலகில் உருவாகவே இல்லை... ! ///

    இதை விட சிறப்பேது...?

    சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி வெங்கடேஷன்

      Delete