Wednesday 30 July 2014

தியானத்தின் ஓரத்தில் ..


மனதை சமன் படுத்த
தியானத்திற்கு ஆயத்தமானேன்

தியானவிரிப்பின் ஒரு ஓரத்தில்
என்னோடு சிறு எறும்பொன்றும்
அமர்ந்துகொண்டது

கண்கள் மூடி
தியானிக்கத் தொடங்கினேன்

ஓரத்தில் இருந்த எறும்பு
பல்கி பெருகி
சாரை சாரையாக
ஊர்ந்துகொண்டிருகிறது
இப்போது தியானத்தின் மேல்.


No comments:

Post a Comment