Wednesday 30 July 2014

எண்ணங்களும் வண்ணங்களும்


வட்டமாக்க தூரிகை பிடிக்க
சதுரமாகிறது

சதுரமென நினைக்கும் நேரம்
மற்றுமொன்றாய்,
முக்கோணம் பல கோணங்களாய்...

பறவையென நினைக்கும் நொடிகளில்
வலைக்குள் அகப்பட்ட சிறு பூச்சியாகும்...

ஆலவிருட்சம் கற்பனிக்க
சிறு நாணலாகிற்று!!

வைக்கும் புள்ளி கோடுகளாய் நீளும்
நீளும் கோடுகள் நிற்கும் ஒரு புள்ளியாய்...

வண்ணம் தீட்ட நினைக்கும் எதுவும்
வசப்படுவதில்லை என்பதில்
வரைந்துகொண்டே இருக்கிறேன் என்றபோதும்,
எதையும் வரைந்ததில்லை நான்!!


No comments:

Post a Comment