Tuesday 8 July 2014

மனம் படித்தவள்


வான் பிடிக்குமா என கேட்டேன்
வான் தழுவும் மேகம் பிடிக்குமென்றாள்

நிலவை பிடிக்குமா என கேட்க
நிலவோடு கொஞ்சும்
நட்சத்திரங்கள் பிடிக்குமென்றாள்

வெயில் பிடிக்குமா என்றேன்
வெயிலில் அலையும்
உன் வியர்வை பிடிக்குமென்றாள்

மழை பிடிக்குமா என்றதற்கு
நனைந்த பின் உன் தலையில் வழியும்
துளிகள் பிடிக்குமென்றாள்

தென்றலென கேட்க
தழுவும் உன் விரல் பிடிக்குமென்றாள்

மரங்கள் பிடிக்குமா என்றேன்
அதனுடன் படரும் கொடிகள் பிடிக்குமென்றாள்

பறவைகள் என்றேன்
பாதுகாப்பாய் அணைத்துக்கொள்ளும்
அதனின் சிறகுகள் பிடிக்குமென்றாள்

இசை பிடிக்குமா என கேட்டேன்
இசைக்கும் குயில் பிடிக்குமென்றாள்

தனிமை பிடிக்குமா என்று கேட்டேன்
உன் நினைவுகளோடான பொழுதுகள் பிடிக்குமென்றாள்

கவிதை பிடிக்குமா என்றேன்
கவிதை புனையும் உன்னை பிடிக்குமென்றாள்

ஊடல் பிடிக்குமா என்றேன்
ஊடலுக்கு பின் வரும் கூடலும் பிடிக்குமென்றாள்



6 comments:

  1. கவி பிடித்து விட்டது என்னை...!

    ReplyDelete
  2. பெண்ணல்லவா...!?,
    எல்லா ஆண்களின் நிறைவேறா கனவு.

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா .... நன்றி தோழனே

      Delete
  3. அழகிய கவிதை. அதிமதுர தேனாக

    ReplyDelete