Wednesday 30 July 2014

உயிர்ப்பூக்கள்


உருட்டி விழிக்கும் விழிகளிருந்தும்
உயிர்ப்பில்லாத கண்கள்,

அசைவுகளற்ற மென் கரங்கள்
தவழ்ந்தரியா , நடந்தரியா பிஞ்சுக் கால்கள்
மலராத அரும்பாய் இதழ்கள் என ,

உயிர்களின் உருவேந்தி
உணர்வுகளின்றி உறைந்திருக்கும்
உயிரில்லா பொம்மைகள்...

மழலைகளின் மென் தீண்டலில்
அவர்களுடன் களிப்பாட
புன்னகை பூத்து
உயிர்பெற்று எழும்பிவிடுகின்றன!!!

1 comment: