Thursday 11 September 2014

வாழ்வும் கவிதையும்



எழுதும் ஒவ்வொரு வரியும்
எங்கோ எழுதப்பட்டது போலவே தோன்றுகிறது

எங்கே.... எப்போது.... யாரால் .... என தெரியாத போதும்
எழுதப்பட்டதென உணரமுடிகிறது

வாழ்வும் அப்படியே ....

எப்படி வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாரோ....எப்போதோ... வாழ்ந்தவர்களை
பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது

அதனால் தானோ
வாழ்வும் கவிதையும் அதனதன் வழியில்
தடையின்றி இயங்கிகொண்டே இருக்கிறது??


2 comments: