Thursday 11 September 2014

உன்னுள் உறையும் ஓர்கணம்


உன் மார்பினுள் தொலைந்து
புதிதாய் எனை மீட்டெடுக்கிறேன்

பரந்த உன் தோள்களில்
என் கனவுகளுக்கு
கொஞ்சம் வண்ணம் தீட்டிக்கொள்கிறேன்

தனித்து விழித்திருந்ந இரவுகளை
உன் மடியுறங்கும் பொழுதொன்றில் கடந்துவிடுகிறேன்

இறுகும் உன் அணைப்பில்
சிறு பேதையாகி விடுகிறேன்

என் அணு துளைக்கும் உன் பார்வையில்
பெண்மை மொக்குடைத்து பூத்து காத்திருக்கிறேன்

இதழோடு உயிர்கலக்கும் அக்கணத்தில்
இப்பிறப்பின் வலியனைத்தும் வென்றிடுவேன்.


No comments:

Post a Comment