Friday 12 September 2014

விருப்பத்தின் தளிர்கள்


பாறையாய் இறுகி கிடந்தது
பாதியில் வெட்டப்பட்ட அம் மரம்

செழித்துக் கிளைத்திருந்த காலத்தில்
பறவைகளின் சரணாலயமாக இருந்தது

நீர்மையை தேடிப் பரவிய வேர் அறியவில்லை
வெட்டப்பட்ட மரத்தின் வலி

விருப்பத்தின் தளிர்கள்
துளிர்க்கலாம் நாளையோ வேறோரு நாளிலோ

பற்றிக்கொள்ள போதுமானதா அப்பறவைகளுக்கு ???

No comments:

Post a Comment