Friday 12 September 2014

நேற்றின் நினைவுகள்


பனிப் படலமாய்
தன்னிருப்பை நினைவூட்டி
காலப் பெருவெளியில் கரைந்தபடி
நிழலாடிக் கொண்டிருக்கிறது
நேற்றின் நினைவுகள்

எதுவென்றறியாத நாளைய பயங்களும்
மனதின் நம்பிக்கைகளும்
ஒன்றாய் பிணைத்து உயிரிழையில் ஊசலாட

இன்றைய நாளோ
அவை துயிலுறங்கி
நேற்றையும் நாளையையும்
சூன்யமாக்கி கல்லெறிய
மனக் குளத்தின் நீர்த்திவலைகளாய்
நினைவுக் கரையான்கள்
மெல்ல முன்னேறி மென்றுக்கொண்டிருக்கிறது


2 comments:

  1. தன்னிருப்பை நினைவூட்டும் !!

    மெலிதாக சப்தம் எழுப்பும் -வளர்ப்பு

    பிராணி போல அருமையான வார்த்தை

    நேற்றின் நினைவுகள் ....

    நாளைய பயங்கள் ....

    இன்றைய நாள் ...!

    நினைவுக் கரையான்கள் - மனக் குளத்தில் -

    மெல்ல முன்னேறி மென்றுக்கொண்டிருக்கிறது ..

    இலக்கிய ( சு ) வாசமுள்ள வரிகள் ! அருமை

    மீரா மேம் !

    ReplyDelete
  2. நன்றி பதி சார்

    ReplyDelete