Sunday 11 January 2015

அதீதம் தொலைத்த பொழுதொன்றில் ..



அடரிருளினும் கொடியதாய்
நிரவிகொண்டிருக்கிறது உன் நீள் மௌனம்

தினங்கள் யுகங்களாய் நகர
எங்கோ உள்மனவெளி அதிர்வுகளும்
நிசப்தமாக்கி கொள்(ல்)கின்றன

உன் அதீதம் தொலைத்த ஏதோ ஒரு நொடியில்
நீ மௌனம் தழுவிக் கொண்டாய்
அன்பினை எதிர்பார்த்துக் காத்திருந்த மனதினை
மௌனச் சிறையில் தாளிட்டேன்

இனியேனும் அன்பின் கரங்களை இறுக மூடிக்கொள்
நம் மௌனங்களில் புதைந்திருக்கும் துயரங்கள்
வேறெவரையும் சூழ வேண்டாம்

நுனியறியா இம்முடிச்சிகளில்
நாம் மட்டும் புதைந்து போவோம்

மௌனத்தின் பிடி தளரும் பொழுதுகளில்
மனதிற்கு சொல்லி வைத்தேன்
இனி எமக்குள் பொதுவானாதாய் வேறொன்றும் இல்லை
இந்த நீள் மௌனம் தவிர என


No comments:

Post a Comment