Sunday 11 January 2015

மீண்டும் வானம்பாடியாய் !!



பெயரறியா பறவையொன்று இசைக்கிறது
என் கற்பனை வரிகளுக்கு
எனக்கு மட்டுமேயான இந்த பிரபஞ்சத்தில்
நாதம் எட்டிப் பார்த்ததாய் எண்ணம்

பாடிடும் மனம் பறக்கத் துடிக்கிறது
பழமைகள் நீங்கி புதிதாய்
தழுவிடும் காற்றின் எதிர்த்திசையில் சிறகசைத்து

மரபுகளுக்குள் சிக்கித்தவிக்கும் கனாக்கள்
மறுபிறவி கண்டன
லயத்தில் சேரா பாக்கள் உதித்தன புதிதாய்

கைதொடும் தூரமே வாழ்வெனும் பால்வெளி
எட்டித் தொட மனமின்றி
வானவில்லாய் வளைத்துப் பார்க்கச்
சிறகடிக்கிறது மனம் மீண்டும் வானம்பாடியாய் !!


No comments:

Post a Comment