இப்பிறவி கடந்தேறி
மீண்டும் பிறவா வரம் வேண்டுகிறாய் நீ
நானோ மறுபிறவிக்கு தவமிருக்கிறேன்
மனதினில் மட்டுமல்லாமல்
உன்னுள் கருவாய் , உருவாய்
உயிராய் ,மெய்யாய்
சேய் எனும் உறவாய் !!
வ(வி)ழி தேடி தவிக்கும் எனக்கு
விடியலே உன் விழிகளில் வேண்டும் என
தவமிருகின்றேன்
மனதால் மடி கிடத்தினாய்
மடி சுமந்து தாலாட்டும் காலத்துக்காய்
வரம் வேண்டி காத்திருக்கிறேன்
மகளென மனம் ஏற்றாலும்
உதிர உறவென்று பிணைத்து விட்டால்
அறுபடாது நம் உறவென்று
மீண்டுமொரு பிறவிக்கு தவமிருக்கிறேன்
மீண்டும் பிறவா வரம் வேண்டுகிறாய் நீ
நானோ மறுபிறவிக்கு தவமிருக்கிறேன்
மனதினில் மட்டுமல்லாமல்
உன்னுள் கருவாய் , உருவாய்
உயிராய் ,மெய்யாய்
சேய் எனும் உறவாய் !!
வ(வி)ழி தேடி தவிக்கும் எனக்கு
விடியலே உன் விழிகளில் வேண்டும் என
தவமிருகின்றேன்
மனதால் மடி கிடத்தினாய்
மடி சுமந்து தாலாட்டும் காலத்துக்காய்
வரம் வேண்டி காத்திருக்கிறேன்
மகளென மனம் ஏற்றாலும்
உதிர உறவென்று பிணைத்து விட்டால்
அறுபடாது நம் உறவென்று
மீண்டுமொரு பிறவிக்கு தவமிருக்கிறேன்
அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete