Monday 29 September 2014

இனிதாய் இனியேனும் !!



நீண்ட காத்திருப்பின் முடிவு
மனதிற்கு இத்தனை இனிதாய் இருக்குமென
அறிந்ததில்லை இதுவரை !!

வெண்பனிக் காலத்தின் குளிரை
முற்றிலும் மறந்த
கத்திரி காலத்தின் வெம்மையில்
புதிதாய் துளிர்த்த இளந்தளிர் சாத்தியமா !!

இருந்தும் இன்றென் சோலையில்
கூதல் காற்றுடன்
மரக்கிளை நிறைத்த இளந்தளிர்களும்

மாற்றங்கள் தொடரட்டும்
இப்படியே இனிமையாய் இனியேனும் !!!



1 comment:

  1. வணக்கம்
    அழகிய உவமைமிக்க கவிதை... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete