Friday 12 September 2014

ஸ்ரீயின் செல்ல குறும்புகள்


இரண்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பி மகன் ஸ்ரீ
நேற்று பள்ளியில் பென்சில் பாக்ஸ்சை தொலைத்துவிட்டான். 
அவன் அம்மா (தம்பி மனைவி) அதற்கு அவனை சத்தம் போட்டு 
பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டாமா என்று கேட்டிருக்கிறாள் . 

குறும்புகார ஸ்ரீ அதற்கு தன் அம்மாவிடம் 
" இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறோருவனுடையது " அப்படின்னு கிருஷணர் கீதையிலேயே சொல்லிருக்காங்க மா.. நேற்று என்னுடைய பாக்ஸ் இன்று வேறு ஒரு பையனுடையது ... நீ ஏன் என்னை திட்டுற... பீ கூல் மா ன்னு கோபமா இருந்த அம்மாவை தன் வசீகர பேச்சால் சிரிக்க வைத்துவிட்டான் ...

2 comments:

  1. கோபமா இருந்த அம்மாவை தன் வசீகர பேச்சால் சிரிக்க வைத்த ஸ்ரீயின் சுட்டிதனம்

    ReplyDelete
  2. எங்கள் வீட்டின் செல்ல கண்ணன் அவன் ராஜேஸ்வரி மேடம்

    ReplyDelete