Thursday 15 January 2015

தைத் திருநாள் வாழ்த்துகள் .



தைமகளின் பிறப்பு
தரணியெங்கும் செழிப்பு
மதம்கடந்து இனம் கடந்து
நித்தம் உதிக்கும் கதிரவனுக்கு
நன்றி சொல்லிடும் நன்னாள்

வருடம் முழுதும் உழைத்துக் களைத்த
உழவர் களிக்கும் திருநாள்!
அவனுக்கிணையாய் கழனியில் கடமையாற்றும்
காளையின் பெருநாள்

குருதியை அமுதாக்கி அவனிகாக்கும்
ஆவினத் திருநாள்
அன்பும் பண்பும் ஒன்றாய் சூழ
மங்கையர் துணையை வேண்டும்
மாதவப் பெருநாள்

அல்லல்கள் மாய்ந்து
அரும்பிடும் இன்ப வாழ்வு
கவலைகள் கெடுக’வென்று
களித்திடும் இன்பத் திருநாள்

புது நெல்லை குத்தி
புத்தரிசி ஆக்கி,
புதுப்பானையில் இட்டு
சர்க்கரையும், வெல்லமும் சங்கமிக்க,
பொங்கல் அது பொங்கி வர,
குடும்பத்தோடும், சுற்றத்தோடும்
குலவையிட்டு, குதூகலிக்கும்
பொங்கல் திருநாள்

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள் .


1 comment:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete