Monday 30 June 2014

கலையுமா அரிதாரம்??



சொல்லிடு என்று ஒருபுறமும்
விட்டுவிடென இன்னொரு புறமுமாய்
மத்தள அடியாய் மனம்...

சொன்னால் அத்துடன் தீர்ந்துவிடும்
சொல்லாவிடினும் தீர்ந்தேதான் விடும்...

நிஜம் மறைக்க முகமூடியாய்
புன்னகை அரிதாரம்...

கலையுமா???
கலைப்பாயா???
விடையறியாமல் நான்.

No comments:

Post a Comment