Monday 30 June 2014

அன்பின் எண்ணிக்கை...


இருவிரல் சேர்த்து
கிள்ளித் தந்த முத்தங்களை
எண்ணிக்கையில் அடக்கிட எண்ணி,

இருக்கை விரல் நீட்டி, மடக்கி
கூட்டி கழித்து , தப்பா சரியா என மனக் கணக்கிட்டு

காலை கண்விழித்ததும் ரெண்டு ,
காப்பியோடு ஒன்னு,
பால்கனியில் வந்துநிற்கும்
புறாக்களை கொஞ்சும் போது
கொஞ்சி கொடுத்தது நாலு ,
அலுவல் செல்லும் அவசரத்தில்
கொடுத்தது ஒண்ணா ரெண்டா...
மூன்றென்று நினைக்கிறேன்

கணக்கிட்டு முடிக்குமுன்னே அந்தி சாய ...

பௌர்ணமி நிலவை பார்க்க அழைத்து
பார்த்தும் பார்க்காமல் திரும்பும் போது
எட்டி கட்டி கொடுத்தது ஒன்று என ...
இன்னும் கணக்கில் அடங்க வில்லை

அழகு கன்னம் கிள்ளி
ஒற்றை விரலால் தொட்டு
இதழ் குவித்து ஒற்றி
பின்னோடு கட்டியென
எப்படி கணக்கிட்டாலும்
நம் முத்தங்கள் எண்ணிக்கையில் அடங்கவில்லை

ஆம்...
அன்பு எண்ணிக்கையில் அடங்காது!!!


No comments:

Post a Comment