Monday 30 June 2014

சொற்களின் ஈரம் தேடி...


ஆளரவமற்ற சாலையின் முடிவில் நின்று
உணர்ச்சிகளற்ற குரலில்
மரணசாசனமாய் உமிழ்ந்துவிட்டு செல்கிறாய்
இது நம் இறுதிச் சந்திப்பென்று

வந்து தெரித்தவைகளில் -சில
நீலமாகவும், அடர்சிவப்பாகவும்
பூத்து கொக்கரித்தன

எஞ்சியவை என் விழி நீரில்
கரைந்துகொண்டிருக்க

திசைஎட்டிலும் தேடுகின்றேன்

எந்த சொல் உன் இறுதிச் சொலென்று ..

No comments:

Post a Comment