Monday 30 June 2014

தாய்மையின் ஏக்கம்....



கருக்கொண்ட காலம்தனில்
சுவாசத்தில் உன் வாசம்...

மார்போடு அணைத்து மடிகிடத்தும் போது
மேனியெங்கும் உன் வாசம்...

விரல் பிடித்து நடக்கையில்- என்னருகில்
இருக்கையிட்டு அமர்ந்துகொண்டது உன் வாசம்...

கல்லூரிக் காலங்களில்- உன்
திசையிருந்து வரும் காற்றினில் உன் வாசம்...

உன் மடிதனில் நானுறங்க ஏங்கும் இந்நாளில் - நீராழி
கடந்தொரு தேசத்தில் நீயும்
உன் நினைவுகளின் வாசம் சுவாசித்து நானும்...


No comments:

Post a Comment