Monday 30 June 2014

வசந்தத்தின் தருணத்திற்காக ....



நீண்டதொரு மௌனம் வெளிபடுத்துகிறது
நமக்குள்ளான இடைவெளியை ...

மனசிறையில் அடைபட்டிருக்கும் வார்த்தைகளை
முதலில் விடுவிப்பது யாரென தடுக்கிறது தன்முனைப்பு  நம்மை ...

ஒரு சிறு கேவலோ, அல்லது ஒற்றைவிழி த்துளியோ
உடைத்திடும் அந்த மௌனகூட்டின் சிறைக் கதவுகளை...

உடைபடும் அந்த வசந்தத்தின் தருணத்திற்காக
காத்துக் கொண்டிருக்கிறோம் இருவேறு திசைகள் நோக்கி...



No comments:

Post a Comment