Monday 30 June 2014

இணையும் தேநீர் கோப்பைகள்


ஆதவனை தழுவிக்கொண்ட
கார்முகில் கூட்டம்...

ஒரு மழைநேர மாலை
யாருமில்லா சாலை...

மின்னல் கீற்றுடன் இதமான சாரல்
குளிர்காற்றின் அணைப்பு...

மனதை வருடும் இசைத் தாலாட்டு
சேரத்த்துடிக்கும் தேநீர் கோப்பைகள்...

திகட்டாத முத்தங்கள்
காதோடு இதழுரசும் ரகசியங்கள்...

சிறு போர்வைக்குள்
இரு உயிர்கள் !!!


No comments:

Post a Comment