Thursday 19 June 2014

நீர்க்குமிழியாய் நினைவுகள் ..


மழைவிட்ட ஒரு மாலைவேளையில்
ஓடை போல ஓடும் நீரில் விளையாட
காகிதக் கப்பல் செய்து தர கேட்டான் ஸ்ரீ.

நினைவின் அதிர்வுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல
பழைய புத்தகங்களெல்லாம் கப்பல்களாயின ...

தூவானமாய் தெறித்த மழைத்துளிக்கு
ஓடைநீரில் மூழ்கிய கப்பலை கண்டு
ஓவென அழ ...

தேற்றும் வழியறியாமல்
தவிக்குமென் நினைவுகளில்
உடைந்து சிதறுகிறது
நீர்க்குமிழி ...


2 comments: